.

Saturday, 8 November 2014

வாழ்வின் கணம் -----பொன்-காந்தன்









எங்கோ போகுமவன்
ஏதோ நினைப்பில்
சாலைச்செடியின் நுனி கிள்ளி
வழி எங்கும் எறிந்தும்
வாயில் சிறுதுளிர் மென்றும்
எங்கோ போய்த்தொலைந்தான்.
இலையுமறியா
அவனுமறியாக் கணங்கள்
வாழ்வில் இப்படி எத்தனை எத்தனை..

No comments:

Post a Comment

Ş