முந்தநாள் இரவும்
அவள் முதலிரவுப்பெண்போலஇருந்தாள்.
மூன்று பிள்ளைகள் பெற்றாயிற்று.
மூத்தவள் கூட
இன்னும் ஓரிரண்டு வயதில் பருவப்பெண்.
பதினைந்து வருடங்கள் ஆயிற்று
நம் இல்லற வாழ்க்கைக்கு.
அவளும் நானும் சண்டைகள் பிடித்ததுண்டு
எப்பொழுது எப்படி
சமரசம் செய்துகொண்டோமென்று தெரியவில்லை.
முப்பது பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் அளவில்
அவளுக்கும் எனக்குமிடையில்
நமது இதயமிருந்தது.
அவளை முழுமையாக நினைக்கின்ற
இரவுகளில் ஒன்று இது.
இப்போதுதான் நம்
நான்காவது பிள்ளைக்காக
அவளை பிரவசவிடுதியில்
அனுமதித்துவிட்டு வந்திருக்கின்றேன்.
No comments:
Post a Comment