அம்மாவின் பிரார்த்தனைகளா
உனது நினைவுகளா
எனது கனவுகளா
எதுவென்று தெரியவில்லை
இதுவரை என்னை
எழுந்து நிற்க வைக்கிறது
மணற்பூ மணல்மழை மணல்நதி
மணல்காடு என பாலைவனம் வழிவதுபோல
நிறைந்திருக்கும்சிலரால்
உன்னாலும் நடக்க முடிகிறதா இல்லையா
சிலரின் கை பிடித்து
நிச்சயம் பிரபஞ்சத்தை உணரமுடியும்.
No comments:
Post a Comment